சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை - பக்தர்கள் தரிசிக்க வசதியாக ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது
Oct 12 2021 9:31AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜையில் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வசதியாக ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது.
இந்த ஆண்டுக்கான மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை
க்காக சபரிமலை ஐயப்பன் கோவில் வருகிற 16 ஆம் தேதி திறக்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக வருகிற 17 ஆம் தேதி முதல் நாள்தோறும் 25 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கொரோனா பரிசோதனை செய்து, 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இல்லாவிட்டால்
பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. அய்யப்ப பக்தர்களுக்கான மருத்துவ சான்று மற்றும் ஆன்லைன் சான்றிதழ் ஆய்வு நிலக்கல்லில் நடைபெறும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.