முத்தாரம்மன் கோவிலில் 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி
Oct 11 2021 12:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடைபெற்றுவரும் தசரா திருவிழாவில் இன்று முதல் வியாழன் வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் கடந்த 6ஆம் தேதி தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கொடியேற்ற நிகழ்ச்சி மற்றும் இம்மாதம் 15ஆம் தேதி நடைபெற உள்ள சூர சம்ஹார நிகழ்ச்சி ஆகியவைகளில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.