ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி திருப்பதி பயணம் : பிரம்மோற்சவத்தின்போது ஏழுமலையானுக்கு சாற்றப்படும்

Oct 10 2021 11:28AM
எழுத்தின் அளவு: அ + அ -

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிக்‍கொடுத்த மாலை, கிளி உள்ளிட்டவை திருப்பதி மலையப்பசுவாமிக்‍கு சாற்றுவதற்காக கொண்டு செல்லப்பட்டது.

திருமலை திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் பிரம்மோற்சவத்தின்போது ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்த மாலை, கிளி, பரிவட்டம் போன்றவை திருப்பதி ஏழுமலையானுக்கு சாற்றப்படுவது வழக்கம். அதன்படி, மோகினி அலங்காரத்தில் எழுந்தருளும் மலையப்ப சுவாமிக்கு சாற்றுவதற்காக, ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்த மாலை, கிளி, பரிவட்டம் உள்ளிட்டவை, திருக்‍கோயில் ஊழியர்களிடம் ஒப்படைக்‍கப்பட்டன. அவற்றை சுமந்து, மாட வீதிகள் வழியாக சுற்றி வந்து திருப்பதிக்கு கொண்டு செல்ல வாகனத்தில் ஏற்றினர். முன்னதாக, ஆண்டாளுக்‍கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00