குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா : உட்பிரகாரத்தில் அம்மன் உலா வரும் நிகழ்ச்சி
Oct 9 2021 3:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி அருகே குலசேகரபட்டிணம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில், கோவிலின் உட்பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தசரா திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும் குலசேகரபட்டிணம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் மூன்றாம் நாளான நேற்று இரவு அம்மன் ரிஷப வாகனத்தில், பார்வதி திருகோலத்தில் எழுந்தருளினார். பின்னர் அம்மன், உட்பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவில் உபயதாரர்கள் மற்றும் அர்ச்சகர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.