புரட்டாசி பவுர்ணமியையொட்டி நிறைமணி காட்சி - பக்தர்கள் தரிசனம்
Sep 20 2021 8:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில், புரட்டாசி பவுர்ணமியையொட்டி, நிறைமணி காட்சி தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், கோயில் கருவறை மற்றும் முன்பகுதியில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள், எண்ணெய், மூலிகை தாவரங்கள், இனிப்பு வகைகள் உள்ளிட்ட பொருட்கள் கட்டி பந்தல் முழுவதும் தொங்க விடப்பட்டிருந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.