குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா - விரதத்தை தொடங்கிய பக்தர்கள்
Sep 20 2021 6:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவினை முன்னிட்டு, பக்தர்கள் விரதத்தை தொடங்கியுள்ளனர். இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா, வரும் 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த தசரா திருவிழாவின் கொடியேற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை. திருவிழாவையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள பக்தர்கள், காப்பு கட்டி ஒரு மாத விரதத்தை தொடங்கியுள்ளனர்.