மதுரையில் கள்ளழகர் திருக்கோயிலில் கள்ளழகரின் ஜடாரி உட்பிரகாரத்தில் பவனி
Jul 24 2021 4:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரையில் பிரசித்திபெற்ற கள்ளழகர் திருக்கோயிலில், ஆடிப்பெருந்திருவிழாவின் 9-வது நாளாக, கள்ளழகரின் ஜடாரி, உட்பிரகாரத்தில் பவனி வந்தது. ஆடிப்பெருந்திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், 9-ம் நாளான இன்று, திருத்தேர் பவனி ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, கள்ளழகர் ஸ்ரீதேவி பூமிதேவி, திருக்கோயில் உட்பிரகாரத்தில் தேர் போன்று வடிவமைக்கப்பட்டு எழுந்தருளச் செய்து பரிகார பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பெருமாளின் ஜடாரி உட்பிரகாரத்தில் பவனி வந்தது.