மதுரை அழகர் கோவிலில் ஆடிப் பெருந்திருவிழா - தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர்
Jul 23 2021 8:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை அழகர் கோவிலில் ஆடிப் பெருந்திருவிழாவின் 8-வது நாளான இன்று தங்ககுதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளி அருள்பாலித்தார். மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற கள்ளழகர் திருக்கோயிலில் ஆடிப்பெருந் திருவிழா கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8-வது நாளான இன்று காலை தங்கப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர், மாலையில் தங்க குதிரையில் எழுந்தருளி அருள் பாலித்தார். தொடர்ந்து கள்ளழகருக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நாளை கோவில் உட்பிரகாரத்திலயே நடைபெறவுள்ளது.