பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தடையை மீறி கிரிவலம் சென்ற பக்‍தர்கள் - தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பிய போலீசார்

Jul 23 2021 8:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

பவுர்ணமியை யொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தடையை மீறி கிரிவலம் வந்த பக்‍தர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை தரிசிப்பது வழக்கம். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்‍கப்பட்டுள்ளதால், கிரிவலத்திற்கு தடை விதிக்‍கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆடி மாத பவுர்ணமிக்‍கு அண்ணாமலையாரை மட்டும் தரிசிக்‍க பக்‍தர்களுக்‍கு அனுமதி அளிக்‍கப்பட்டுள்ளது. அதேவேளையில் கிரிவலம் செல்ல மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். இதற்காக கிரிவலப் பாதை சுற்றிலும் போலீசார் தற்காலிக தடுப்புகளை அமைத்திருந்தனர். எனினும், கோவிலுக்‍கு வந்த பக்‍தர்கள் கிரிவலம் செல்ல முயன்றதால், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதனால் திருவண்ணாமலைக்‍கு வருகை புரிந்த வெளியூர் பக்‍தர்கள் அங்குள்ள மாடவீதியில் வலம் வந்து ஆங்காங்கே காத்திருந்ததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00