அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது - 2-ம் தேதி தேரோட்டம்
Jul 23 2021 2:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியின் ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அய்யா வைகுண்டர் அவதரித்த இடமாக கருதப்படும் திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியின் ஆடி திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி இன்று காலை 5 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை நடந்தது. தொடர்ந்து கொடிப்பட்டம் அவதாரபதியையும், கொடிமரத்தை சுற்றி வலம் வந்தது. பின்னர் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ் தர்மர் கொடியேற்றினார். இந்த நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில், தினமும் மாலை அய்யா வைகுண்டர் கருட வாகனம், இந்திர வாகனம்,தொட்டில் வாகனம், புஷ்பவாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் எழுந்தருளிகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், அடுத்த மாதம் 2-ம் தேதி நடைபெறுகிறது.