பனிமயமாதா ஆலய ஆண்டு திருவிழா வரும் 26-ம் தேதி துவக்கம்
Jul 22 2021 3:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா ஆலய ஆண்டு பெருந்திருவிழா இம்மாதம் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இந்த கொடியேற்ற நிகழ்ச்சி மற்றும் திருவிழாவை ஒட்டி நடைபெறும் திருப்பலிகளில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா ஆலயம் உலக புகழ்பெற்றதுடன் ரோம் நகரின் பசலிகா அந்தஸ்து பெற்ற ஆலயங்களில் ஒன்றாகும். கோவில் திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மறைமாவட்ட ஆயர் அருட்திரு. ஸ்டீபன் அந்தோணி உள்ளிட்டோருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.