சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழாவில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை - மாவட்ட நிர்வாகம்
Jul 22 2021 11:05AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழாவில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று, தென்காசி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோமதி அம்பாள் திருக்கோயிலில், ஆண்டுதோறும் ஆடித்தபசு திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஆடித்தபசு விழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது. நாளை திருவிழா நடைபெற உள்ள நிலையில், பொதுமக்களுக்கு அனுமதி இல்லையென மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனினும், நிகழ்ச்சிகளை யூடியூபில் நேரலையாக காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் கோயிலுக்கு வருவதை தருவதை தவிர்த்து, ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென, தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.