ஆடி மாத பூஜைகளுக்காக திறக்கப்பட்ட சபரிமலை கோயில் நடை அடைப்பு - 5 நாட்களாக நடைபெற்ற பூஜையில் பக்தர்கள் பங்கேற்று வழிபாடு
Jul 22 2021 10:14AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆடி மாத பூஜைகளுக்காக திறக்கப்பட்ட சபரிமலை அய்யப்பன் கோயில் நடை 5 நாட்கள் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு நேற்று சாத்தப்பட்டது. நிறைவு நாளான நேற்று நடைபெற்ற கலச பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யப்பனை வழிபட்டனர். ஆவணி மாத பூஜை மற்றும் ஓணம் பண்டிகைக்காக சபரிமலை கோயில் நடை அடுத்த மாதம் 15-ம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்றும், 23-ம் தேதி ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகள் நடைபெறும் எனவும் திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.