திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பெருமாள் கோயில் ஆனித்திருமஞ்சன வைபவம் - புனித நீர் அடங்கிய வெள்ளிக்‍குடங்களுடன் ஊர்வலம்

Jul 21 2021 4:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பெருமாள் கோயில் ஆனித்திருமஞ்சன வைபவத்திற்காக, புனித நீர் அடங்கிய வெள்ளிக்‍குடங்களை கோயில் அர்ச்சகர்கள் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவுக்‍கு சுமந்து சென்றனர்.

மண்ணச்சநல்லூர் அருகே, திருவெள்ளறை கிராமத்தில் எழுந்தருளியுள்ள திருவெள்ளறை பெருமாள் திருக்‍கோயில், 108 திவ்ய தேசங்களில், 4-வது திவ்யதேசமாகப் போற்றப்படுகிறது. இக்‍கோயிலில் ஆனித்திருமஞ்சன வைபவத்தையொட்டி, திருக்‍காவிரியிலிருந்து புனிதநீர் வெள்ளிக்‍குடங்களில் நிரப்பப்பட்டு, கோயில் அர்ச்சகர்கள், 15 கிலோ மீட்டர் தொலைவுக்‍கு, ஒவ்வொருவராக மாறி மாறி சுமந்துச் சென்றனர். பின்னர் ஆலய நுழைவுவாயிலில் உள்ள மண்டபத்தில் வெள்ளிக்குடத்திலிருந்து புனிதநீர் தங்கக்‍குடத்திற்கு மாற்றப்பட்டது. அங்கிருந்து தங்கக்குடம், கோயில் யானை ஆண்டாள் மீது வைக்கப்பட்டது. நாதஸ்வரம் மற்றும் மேளதாளங்கள் முழங்க திருவீதி வலம் வந்து சன்னதிக்கு தங்கக்‍குடம் கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூலவருக்கு சாற்றப்பட்டிருக்கும் அங்கில்களைக் களைந்து திருமஞ்சனம் செய்விக்கப்பட்டு பின்னர் அங்கில்கள் மாற்றப்பட்டு, மங்களாஹாரத்தி நடைபெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00