பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பலவேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் தனிமனித இடைவெளியுடன் சிறப்பு தொழுகை
Jul 21 2021 2:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பலவேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
தியாகத் திருநாளான பக்ரீத் திருநாளை முன்னிட்டு திருச்சி அரியமங்கலம் பள்ளி வாசல், நத்தர்ஹலி தர்ஹா, துறையூர், மணப்பாறை, லால்குடி, முசிறி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் இன்று சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தொழுகைக்குப் பின்னர் இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் கட்டியணைத்து தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
சேலம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள ஜாமியா மசூதியில் புத்தாடை அணிந்து இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை மேற்கொண்டனர். அப்போது, சமூக இடைவெளி கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிந்தவாறும் ஒருவருக்கொருவர் ஈகைத் திருநாள் வாழ்த்துகள் தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதேபோல், சிவகங்கை மாவட்டம் நவாப் ஜும்மா பள்ளிவாசல், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், திருமானூர், தா. பழுர், கன்னியாகுமரி மாவட்டத்தில் நாககோவில், கோட்டார், இடலாகுடி, லாயம், திட்டுவிளை, தக்கலை, தேங்காய் பட்டிணம் பள்ளிவாசல், தேனி மாவட்டம் பெரியகுளம், தேனி, போடி, சின்னமனூர், கம்பம் கூடலூர் பள்ளி வாசல் மற்றும் கோவையில், அத்தர் ஜமாத், கோட்டைமேடு பெரிய பள்ளி, திப்பு சுல்தான் உள்ளிட்ட பள்ளிவாசல்களில் பக்ரீத் பெருநாளை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது.