வேளாங்கண்ணியில் அமைந்துள்ள ஸ்ரீரஜதகிரீஸ்வரர் ஆலயத்தில் வாராகி அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள்
Jul 20 2021 11:48AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீரஜதகிரீஸ்வரர் ஆலயத்தில் வாராகி அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இந்த ஆலயத்தில் ஆஷாட நவராத்திரிப் பெருவிழா கடந்த 10-ம் தேதி தொடங்கி, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. விழாவின் 9-ம் நாளன்று, அம்மனுக்கு, ஆப்பிள், மாதுளை, சாத்துக்குடி, திராட்சை, அண்ணாசி உள்ளிட்ட வகை பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முன்னதாக சிறப்பு யாகம் நடத்தப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.