அழகர்கோயிலில் நடைபெற்று வரும் ஆடிப்பெருந்திருவிழா - கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்த கள்ளழகர்
Jul 20 2021 11:24AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மாவட்டம் அழகர்கோயிலில், ஆடிப்பெருந்திருவிழாவையொட்டி, கருட வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அழகர்கோவில் மலை பகுதியில் உள்ள 108 வைணவ திவ்யதலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் கள்ளழகர் திருக்கோயிலில் ஆடிப்பெருந்திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் கள்ளழகராகிய சுந்தரராஜப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது. விழாவின் 4-ம் நாள் நிகழ்ச்சியில், சுவாமி தங்கப்பல்லக்கில் எழுந்தருளிய பின் அலங்கார திருமஞ்சனம் நடைபெற்றது. இதனையடுத்து கள்ளழகர் கருட வாகனத்தில் எழுந்தருளினார்.
இதனைத்தொடர்ந்து வரும் 24-ம் தேதி கோயில் உட்பிரகாரத்திலேயே திருத்தேர்த் விழா நடைபெறவுள்ளது. கொரோனா பரவல் காரணமாக, பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.