மதுரை அழகர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் ஆடிப் பெருந்திருவிழா - அனுமர் வாகனத்தில் எழுந்தருளி காட்சி தந்தார் கள்ளழகர்
Jul 19 2021 10:17AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை அழகர் திருக்கோயிலில் ஆடிப் பெருந்திருவிழாவையொட்டி, கள்ளழகர், அனுமர் வாகனத்தில் எழுந்தருளினார். ஆடிப்பெருந்திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கள்ளழகராகிய சுந்தராஜப்பெருமாளுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. சுவாமி தங்கப்பல்லக்கிலும், 3-வது நாளான நேற்று இரவு கள்ளழகர், அனுமர் வாகனத்திலும் எழுந்தருளினர். சுவாமி வீதி உலா கோவில் உட்பிரகாரத்திலயே நடைபெற்றது. வரும் 24-ம் தேதி கோயில் உட்பிரகாரத்திலேயே திருத்தேர் விழா நடைபெறவுள்ளது.