சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : இன்று முதல் தினசரி 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி
Jul 18 2021 3:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இன்று முதல் பத்தாயிரம் பக்தர்களுக்கு கேரள அரசு அனுமதி அளித்துள்ளது.
கேரளாவில் கடந்த மே மாதம் கொரோனா தொற்று பரவல் தீவிரம் அடைந்ததைத் தொடா்ந்து, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தா்கள் வர தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், ஆடி மாதப் பிறப்பையொட்டி, நேற்று முதல் வரும் 21-ம் தேதி வரை கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. இந்த 5 நாள்களும் கோயிலுக்கு வர பக்தா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சபரிமலையில் இன்று முதல் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. அதேசமயம் பக்தர்கள், கோவிலின் இணையதளத்தில் முன்பதிவு செய்திருக்க வேண்டும் என்றும், கொரோனா தடுப்பூசி அல்லது பரிசோதனைக்கான சான்றிதழுடன் வர வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.