ஆடி முதல் நாளில் சென்னை மயிலாப்பூரில் உள்ள முண்டக கண்ணியம்மன் கோயிலுக்கு திரளான பெண்கள் வருகை
Jul 17 2021 2:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆடி முதல் நாளான இன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள முண்டக கண்ணியம்மன் கோயிலுக்கு திரளான பெண்கள் வருகை புரிந்திருந்தனர்.
அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படும் ஆடி மாதத்தில், கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம். பெண்கள் விரதமிருந்து வழிபடுவர். அந்த வகையில், ஆடி முதல் நாளான இன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள முண்டக கண்ணியம்மன் கோயிலுக்கு சென்று பெண்கள் பலர் சுவாமி தரிசனம் செய்தனர். சிலர் குடும்பத்துடன் வந்து அம்மனை வழிபட்டனர். தற்போது கொரோனா தொற்று காலம் என்பதால் அரசு அறிவித்த கட்டுப்பாடுகளுடன் கோயிலில் பூஜை நடைபெற்றது.