ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறப்பு - நாள் ஒன்றுக்‍கு 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி

Jul 17 2021 11:31AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. சுவாமியை தரிசிக்‍க இன்று முதல் சபரிமலையில் பக்‍தர்களுக்‍கு அனுமதி அளிக்‍கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக சபரிமலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஊரடங்கில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், சபரிமலையில் ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் இன்றுமுதல் நாள் ஒன்றுக்‍கு 5 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்‍கு 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான ஆன்லைன் சான்றிதழ் கட்டாயம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆடி மாத பிறப்பை ஒட்டி, சபரிமலையில் இன்று முதல் வரும் 21-ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. ஆடி மாத பிறப்பையொட்டி திறக்‍கப்பட்ட கோயில் நடை வரும் 21-ம் தேதி இரவு 10 மணிக்கு சாத்தப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00