ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறப்பு - நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி
Jul 17 2021 11:31AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. சுவாமியை தரிசிக்க இன்று முதல் சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக சபரிமலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஊரடங்கில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், சபரிமலையில் ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் இன்றுமுதல் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான ஆன்லைன் சான்றிதழ் கட்டாயம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆடி மாத பிறப்பை ஒட்டி, சபரிமலையில் இன்று முதல் வரும் 21-ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. ஆடி மாத பிறப்பையொட்டி திறக்கப்பட்ட கோயில் நடை வரும் 21-ம் தேதி இரவு 10 மணிக்கு சாத்தப்படுகிறது.