மதுரை அழகர் கோயிலில் ஆடிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - பக்தர்கள் அனுமதியின்றி பூஜைகளுக்கு ஏற்பாடு
Jul 16 2021 12:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரையில், கள்ளழகர் கோயில் ஆடிப்பெருந் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
புகழ்பெற்ற கள்ளழகர் கோயில் திருவிழாவுக்கு மதுரை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவர். ஆனால் தற்போது கொரோனா காலம் என்பதால் பக்தர்கள் அனுமதி இன்றி இத்திருவிழா நடைபெற உள்ளது. ஆடிப்பெருந் திருவிழாவின் முன்னோட்டமாக கொடியேற்றம் இன்று நடைபெற்றது. இதற்காக அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, கள்ளழகர் என்று அழைக்கக்கூடிய சுந்தராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இன்று முதல் 11 நாட்களுக்கு திருவிழா நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 24ஆம் தேதி நடைபெறவிருந்த ஆடி பிரமோற்சவ தேரோட்டமானது ரத்து செய்யப்பட்ட நிலையில், கோவில் உட்பிரகாரத்திலயே ஆகமவிதிப்படி திருத்தேர் நிகழ்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாக்களின் போது பக்தர்களுக்கு அனுமதி இல்லாத நிலையில், சுவாமி தரிசனத்திற்கும் மட்டும் அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.