திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் - காற்றில் பறந்த சமூக இடைவெளியால் தொற்று பரவும் அச்சம்
Jul 15 2021 5:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பிரசித்திபெற்ற முருகன் கோயிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டமாக குவிந்ததால் கொரோனா பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஊரடங்கில் தளர்வு காரணமாக கோயில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்று வளர்பிறை சஷ்டி என்பதால் முருகப் பெருமானை தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்தனர். பக்தர்கள் சமூக இடைவெளியின்றி, கூட்டம் கூட்டமாகச் சென்று சாமி தரிசனம் செய்தனர். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படாததால், கொரோனா தொற்று பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.