திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனி மாதத்தையொட்டி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது
Jul 13 2021 3:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனி மாதத்தையொட்டி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. ஏழுமலையான் கோயிலில், தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய திருநாட்களுக்கு முன், வரும் செவ்வாய் அன்று, கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் என்ற பெயரில், கோயிலை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. கோயில் கருவறை தொடங்கி, கோயிலின் அனைத்துப் பகுதிகள், தயாரிப்பு பாத்திரங்கள், நைவேத்யம் மற்றும் பிரசாதங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் ஆகியவை அனைத்தும் தூய்மைப்படுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து பகல் 12 மணிக்குமேல் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டது.