நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் வைகாசி மாத கார்த்திகை - முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
Jun 8 2021 1:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில், வைகாசி மாத கார்த்திகையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. கார்த்திகை மண்டபத்தில் சிங்காரவேலர், வள்ளி, தெய்வானைக்கு சிவாச்சாரியார்கள் பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பழச்சாறுகள், பழங்கள், பன்னீர் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து அலங்காரம் மற்றும் தீபாராதனை காண்பித்தனர். ஊரடங்கு உத்தரவால் பக்தர்களின்றி சிவாச்சாரியர்கள், ஆலய ஊழியர்கள் மட்டுமே பங்கேற்றனர்.