ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரைத் திருவிழா - நம்பெருமாள், கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு சந்தனு மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருளினார்
May 11 2021 2:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் சித்திரைத் தேர்த் திருவிழாவையொட்டி, நம்பெருமாள், கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு சந்தனு மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருளினார். சித்திரைத் திருவிழாவின் 10-ம் நாளான நேற்று, கண்ணாடி அறையிலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு சந்தனு மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் அங்கிருந்து திருக்கொட்டாரம் வலம் வந்து இரவு கண்ணாடி அறைக்கு சென்றடைந்தார். கொரோனா பரவல் காரணமாக, பக்தர்களுக்கு இந்நிகழ்ச்சியில் அனுமதி இல்லை.