கொரோனாவிலிருந்து மக்களை காக்க ராமநாதபுரம் கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் பிரம்மாண்ட தன்வந்திரி யாகம்
May 7 2021 12:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா நோய்த் தொற்றுப் பரவலில் இருந்து பொதுமக்களை காக்க வேண்டி ராமநாதபுரம் கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் பிரம்மாண்ட யாகம் பக்தர்களின்றி நடைபெற்றது.
கொரோனா நோய்த் தொற்று 2-ம் அலை தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்த நோய்த் தொற்றுத் தாக்குதலில் இருந்து, பொதுமக்களை காக்க வேண்டி, ராமநாதபுரம் கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் இன்று அதிகாலை 4 மணியளவில் தன்வந்திரி யாகம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், சிவாச்சாரியார்கள் மட்டும் இந்த யாகத்தில் கலந்து கொண்டனர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பொதுமக்களை காப்பாற்ற கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.