பிரசித்தி பெற்ற நாகர்கோவில் வண்டிகுடியிருப்பு முத்தாரம்மன் கோவிலில் சிறப்பு பூஜை - கொரோனா தொற்றில் இருந்து விடுபட யாக வழிபாடு
Apr 22 2021 12:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா தொற்று முழுமையாக நீங்கி அனைவரும் நோய் பாதிப்பிலிருந்து விடுபடும் நோக்கில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள முத்தாரம்மன் கோயிலில் நோய் தீர்க்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
நாகர்கோவிலை அடுத்த வண்டிக்குடியிருப்பில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோயில், அப்பகுதி மக்களிடையே சிறப்பு பெற்றதாகும். அங்குள்ள இந்திராட்சி அம்மன் சன்னதியில் கொரோனா நோய் தீர்க்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மருத்துவம் வளர்ச்சி அடையாத முன்னோர் காலத்தில் காலரா, அம்மை போன்ற நோய்களின் தாக்கத்திலிருந்து விடுபட இது போன்ற பூஜைகள் செய்யப்பட்டு, நிவாரணம் கிடைத்ததாக நம்பப்படுகிறது. எனவே கொரோனாவைக் கட்டுப்படுத்த ஒரு புறம் தடுப்பூசி போன்ற மருத்துவ முறைகள் நடைமுறையில் உள்ள போதிலும், மற்றொரு முயற்சியாக இந்திராட்சி அம்மன் சன்னதியில் நோய் தீர்க்கும் இந்த சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.