அண்ணாமலையார் கோவிலில் சித்ரா பெளர்ணமியன்று கிரிவலம் செல்ல தடை
Apr 21 2021 5:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமியன்று பக்தர்கள் கிரிவலம் செல்ல திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகா தீப திருவிழாவும், சித்திரா பௌர்ணமியும் உலகப் பிரசித்தி பெற்றது. இந்த நாட்களில் சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து 14 கிலோமீட்டர் கிரிவலம் வருவார்கள். இந்நிலையில் வரும் 26-ம் தேதி சித்ரா பெளர்ணமியன்று கிரிவலம் செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் திரு. சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.