ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல கட்டுப்பாடு
Apr 21 2021 2:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் கட்டுப்பாடுகளுடன் செல்ல கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு வரும் 24 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கியுள்ள கோயில் நிர்வாகம், முழு ஊரடங்கான ஞாயிற்றுக்கிழமையில் அனுமதி இல்லை என தெரிவித்துள்ளது. மேலும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.