நெல்லையில் கோயில் திருவிழாக்களுக்கு அனுமதிகோரி ஆட்சியரிடம் மனு
Apr 21 2021 12:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோயில் திருவிழாக்களுக்கு இரவு 12 மணி வரை அனுமதி வழங்க வேண்டுமென, நெல்லை மாவட்ட ஆட்சியரிடம், கரகாட்ட கலைஞர்கள் மனு அளித்தனர். கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளால் நெல்லை மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட கரகாட்ட கலைஞர்கள், பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். எனவே, கோயில் திருவிழாவிற்கு அனுமதி வழங்கக்கோரி, கடந்த வாரம் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தபோதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே 2-ம் முறையாக, 100க்கும் மேற்பட்ட கரகாட்ட கலைஞர்கள், பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டையில் இருந்து ஊர்வலமாக சென்று, நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.