ஸ்ரீ சத்குரு தியாகராஜரின் 254-வது ஜெயந்தி திருநாள் - காணொலி வாயிலாக இசையஞ்சலி செலுத்திய இசைக்கலைஞர்கள்
Apr 20 2021 5:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீசத்குரு தியாகராஜரின் 254-வது ஜெயந்தி திருநாளையொட்டி, திருவாரூரில் உள்ள அவர் பிறந்த இல்லத்தில் இசையஞ்சலி செலுத்தப்பட்டது.
சங்கீத மும்மூர்த்திகளில் இரண்டாவதாக அவதரித்த ஸ்ரீசத்குரு தியாகராஜர், திருவாரூரில், கிபி. 1767-ம் ஆண்டு சித்திரை மாதம் பூச நட்சத்திர நாளில் பிறந்தார். அவரது ஜெயந்தி திருநாளையொட்டி, திருவாரூர் புதுத்தெருவில் அவர் பிறந்த இல்லத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இசைக்கலைஞர்கள், ஸ்ரீசத்குரு தியாகராஜர் இயற்றிய பஞ்சரத்தின கீர்த்தனைகளைப் பாடி புகழஞ்சலி செலுத்தினர். கொரோனா ஊரடங்கு காரணமாக, இசைக்கலைஞர்கள், காணொலி வாயிலாக பாட, தியாகராஜர் பிறந்த இல்லத்தில் ஒளிபரப்பப்பட்டது.