கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருச்செந்தூர் கடலில் புனித நீராட பக்தர்களுக்குத் தடை
Apr 20 2021 4:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, திருச்செந்தூர் முருகன் கோயில் கடலில் பக்தர்கள் புனித நீராட அனுமதி மறுக்கப்பட்டது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில், கடலில் பக்தர்கள் புனித நீராட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கடற்கரை பகுதியில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் புனித நீராட வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். ஆனால் கோயிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை.