தருமபுர ஆதீனம் சார்பில் குருலிங்க சங்கம பாத யாத்திரை
Apr 20 2021 4:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தருமபுர ஆதீனம் சார்பில் நடைபெற்று வரும் குரு லிங்க சங்கம பாத யாத்திரைக்கு நீடூர் பள்ளிவாசல் அருகே இஸ்லாமியர்கள் வரவேற்பு அளித்தனர். பிரசித்திபெற்ற வைத்தீஸ்வரன் கோயில், வைத்தியநாத சுவாமி ஆலயத்தின் கும்பாபிஷேகம் வரும் 29-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தருமபுர ஆதினம் சார்பில், குருலிங்க சங்கம பாதயாத்திரை கடந்த 17-ம் தேதி ஆதீன மடத்தில் இருந்து புறப்பட்டது. ஆதின 27வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் பாதயாத்திரை நடைபெற்றது. நீடூர் பெரியபள்ளிவாசல் சார்பில் அதன் நிர்வாகிகள் பங்கேற்று, மடாதிபதிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.