பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடிய ராமேஸ்வரம் கோயில்
Apr 20 2021 3:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது. ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்கள் வருகை குறைந்து வெறிச்சோடியது. அக்னி தீர்த்த கடலில் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதால், குறைந்த அளவிலேயே பக்தர்கள் புனிதநீராடி சாமி தரிசனம் செய்தனர். இதனால் வியாபாரிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.