சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் - பக்தர்களின்றி கோயிலின் உள்பிரகாரத்தில் தேரோட்டம் நடைபெற்றது
Apr 20 2021 2:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, கோயில் உட்பிரகாரத்தில் பக்தர்களின்றி நடைபெற்றது.
சமயபுரம் மாரியம்மன் கோயிலில், சித்திரை தேர் திருவிழா கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா 2-ம் அலை காரணமாக, சித்திரை திருவிழாவில் பங்கேற்க பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கடந்த 10 நாட்கள் நடைபெற்ற சித்திரை தேர் திருவிழாவின் ஒவ்வொரு நாளும், அம்மன், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, கோயில் உள்பிரகாரத்தில் வீதி உலா வந்தார். முக்கிய நிகழ்வான தேரோட்ட விழா இன்று காலை நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக, கோயில் உள்பிரகாரத்தில் தேரோட்ட விழா நடைபெற்றது. குதிரை வாகனத்தில் கருப்புசாமி உள்பிரகாரத்தில் சுற்றி வந்த பின்னர், அம்மனை பல்லாக்கில் வைத்து சுற்றி வந்தனர். பின்னர், சிறிய தேரில் அம்மனை வைத்து, மேளதாளங்கள் முழங்க, கோயிலின் உள்பிரகாரத்தில் எடுத்து சென்றனர். காலை 10.30 மணிக்கு மேல் 11.20 மணிக்குள்ளாக, மிதுன லக்னத்தில் இரண்டாம் உள்பிரகாரத்தை சுற்றி வந்து அபிஷேக மண்டபத்தை தேர் சென்றடைந்தது. இந்த தேரோட்டத்தில் கோயில் பணியாளர்கள், கோயில் குருக்ககள் மட்டுமே கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தேர் திருவிழாவை முன்னிட்டு காலை 5.30 மணி முதல் 9 மணி வரை தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதை தொடர்ந்து, மதியம் 12 மணிக்கு மேல் இரவு 7 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு கோயில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.