கொரோனா பரவல் எதிரொலி: கூத்தாண்டவர் கோயில் திருவிழா ரத்து
Apr 20 2021 2:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற பிள்ளையார் குப்பம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இக்கோயிலில் வெகு விமர்சையாக நடைபெறும் சித்திரை திருவிழாவுக்கு மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலிருந்தும் ஏராளமான திருநங்கைகள் வருகை புரிவர். இந்நிலையில், இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் அறங்காவலர் குழு தலைவர் தரணி தெரிவித்துள்ளார்.