வேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலில் அகத்தியருக்கு சிவனும், பார்வதியும் திருமணக் கோலத்தில் காட்சி
Apr 19 2021 5:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அமைந்துள்ள வேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலில், அகத்தியருக்கு சிவனும், பார்வதியும் திருமணக் கோலத்தில் காட்சி தரும் விழா பக்தர்கள் இன்றி நடைபெற்றது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு காரணமாக கோவிலில் நடைபெற்ற திருமணக் கோலக் காட்சியை காணும் வழிபாட்டில் பக்தர்கள் யாரையையும் அனுமதிக்க வில்லை. இதில் சிவாச்சாரியர்களின் வேத மந்திரங்கள் முழங்க, சுவாமி சன்னதி முன்பு திருமால் முன்னிலையில் சிவபெருமான் பார்வதி திருமணக்கோலத்தில் காட்சியளித்தனர்.