ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலில் ராமானுஜரின் 1,004-ம் ஆண்டு அவதார உற்சவ விழா
Apr 19 2021 5:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலில், ராமானுஜரின் ஆயிரத்து நான்காம் ஆண்டு அவதார உற்சவ விழா, கொரோனா கட்டுப்பாடுகளால் எளிமையாக தொடங்கியது. இதையொட்டி, கோயில் வளாகத்திலுள்ள கண்ணாடி மாளிகையின் முன்புறமுள்ள மண்டபத்தில், ராமானுஜரை எழுந்தருள செய்து, உற்சவம் தொடங்கியது. கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், ராமானுஜரை தரிசனம் செய்ய பக்தர்கள் ஏராளமானோர் குவிந்ததால், திரைச்சீலையை அகற்றி தரிசனம் செய்ய அதிகாரிகள் அனுமதித்தனர்.