கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் சித்திரை விழா கொடியேற்றம்
Apr 18 2021 4:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இன்று காலை கொடிமரத்திற்கு சிறப்புப் பூஜைகள் செய்து, பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் மற்றும் மேளதாளம் முழங்க, கருடாழ்வார் திருவுருவம் வரையப்பட்ட கொடிக்கு நட்சத்திர ஆரத்தி செய்யப்பட்டு ஏற்றப்பட்டது. கொடியேற்றத்தை முன்னிட்டு உற்சவர் சாரங்கபாணி சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் கொடிமரம் அருகே எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.