விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி
Apr 13 2021 5:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் உண்டியல் காணிக்கையாக 49 லட்சம் ரூபாய் ரொக்க பணம், 22 கிராம் தங்கம், 165 கிராம் வெள்ளி கிடைத்துள்ளதாக அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கோவிலின் உண்டியல் எண்ணும் பணி இந்து சமய அறநிலைத்துறை துணை ஆணையர் திரு. பொன்.சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. மேற்படி உண்டியல் திறப்பில் செயல் அலுவலர், பரம்பரை அறங்காவலர், தக்கார் பிரதிநிதி, அறநிலையத் துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.