கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோயிலில் பங்குனி உற்சவ திருவிழா
Apr 13 2021 3:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோயிலில் பங்குனி உற்சவ திருவிழாவினை முன்னிட்டு, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி-அம்பாள் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் 9-ம் நாளான இன்று காலை நடைபெறவிருந்த திருத்தேரோட்ட நிகழ்வுக்கு பதிலாக, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், சுவாமி பூவனநாதரும், அம்பாள் செண்பக வள்ளியும் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் கோயிலுக்கு வெளியே நின்று தரிசனம் செய்தனர்.