ரம்ஜான் நோன்பு கேரளாவில் தொடங்கியது - கன்னியாகுமரியில் நோன்பைத் தொடங்கிய இஸ்லாமியர்கள்
Apr 13 2021 2:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இஸ்லாமியர்களின் புனித நிகழ்வான ரம்ஜான் நோன்பு கேரளாவில் இன்று தொடங்கியதையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்திலும் இஸ்லாமியர்கள் தொழுகையோடு ரமலான் நோன்பைத் தொடங்கினர்.
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள், 5 கடமைகளில் ஒன்றாகக் கருதப்படும் ரமலான் நோன்பை ஆண்டுதோறும் அவர்களது புனித மாதமான ரமலான் பிறை கண்டு தொடங்குவது வழக்கம். இந்த நாட்களில் அதிகாலையில் மசூதிகளுக்குச் சென்று, தொழுகையுடன் தங்கள் நாளை தொடங்குவர். கொரோனா கட்டுப்பாடு காரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள், தராவியா தொழுகை மற்றும் சகர் உணவுக்குப் பிறகு இன்று அதிகாலை தங்கள் குடும்பத்தினரோடு, தொழுகையில் ஈடுபட்டு நோன்பைத் தொடங்கினர். கடந்த ஆண்டும் ரமலான் நோன்பின்போது, கொரோனா பரவலின் வேகம் அதிகமாகக் காணப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் கொரோனா அச்சுறுத்தல் நிலவுவதால், விரைவில் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் அனைவரும் விடுபட வேண்டும் என இறைவனைப் பிரார்த்திப்பதாக இஸ்லாமியர்கள் தெரிவித்தனர்.