விழுப்புரம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஊஞ்சல் உற்சவம் - பக்தர்களின்றி நடந்தேறியது
Apr 12 2021 11:36AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விழுப்புரம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஊஞ்சல் உற்சவம் பக்தர்கள் கூட்டமின்றி எளிமையாக நடைபெற்றது. பங்குனி அமாவாசையையொட்டி நேற்று ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றதையடுத்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் அம்மனுக்கு பட்டு சேலை உடுத்தி அலங்காரம் செய்யப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட அம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டு பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. வழக்கமாக லட்சக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்கும் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய ஊஞ்சல் உற்சவம் பக்தர்கள் இன்றி நடைபெற்றது.