விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜைக்‍காக சபரிமலை கோவில் நடை திறப்பு - கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் மகனுடன் இருமுடி கட்டிக்‍கொண்டு சபரிமலையில் தரிசனம்

Apr 12 2021 10:18AM
எழுத்தின் அளவு: அ + அ -

விஷூ மற்றம் சித்திரை மாத பூஜைக்‍காக சபரிமலை கோவில் நடை திறக்‍கப்பட்டுள்ள நிலையில், கேரள ஆளுநர் திரு. ஆரிஃப் முகமது கான், தனது மகனுடன் இருமுடி கட்டிக்‍கொண்டு சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்தார்.

விஷூ மற்றம் சித்திரை மாத பூஜைக்‍காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் மாலை திறக்‍கப்பட்டது. இந்நிலையில், நேற்று மாலை பம்பை வந்த கேரள ஆளுநர் திரு. ஆரிஃப் முகமது கான், பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டினார். அவரை சுமந்து செல்ல பம்பையில் 2 டோலிகள் தயார் படுத்தப்பட்டிருந்தன. ஆனால் 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற ஆளுநர் திரு. ஆரிஃப் முகமது கான், சபரிமலையில் தரிசனம் செய்தார். இரவு 8 மணிக்கு இருமுடி கட்டோடு 18-ம் படியேறிய அவர், அய்யப்பனை தரிசனம் செய்து, பின்னர் மாளிகைப்புரத்து அம்மனையும், வாவரையும் வணங்கினார். திரு. ஆரிஃப் முகமது கானுடன் அவரது இளையமகன் கபீர் முகமது கானும் தரிசனம் செய்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00