ஹரித்துவாரில் களைகட்டிய கும்பமேளா கொண்டாட்டம் - திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கானோர் அதிகாலை முதலே புனித நீராடல்
Apr 12 2021 9:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில், கும்பமேளா திருவிழாவையொட்டி அதிகாலை முதலே பக்தர்கள் இன்று புனித நீராடினர்.
ஹரித்துவாரில், கங்கை நதிக்கரையில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா நடைபெறுவது வழக்கம். அப்போது, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கங்கை நதியில் புனித நீராடுவர். கடைசியாக, 2010-ம் ஆண்டு கும்பமேளா நடைபெற்றது. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, ஹரித்துவாரில், ஏப்ரல் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை கும்பமேளா நடைபெறும் என்றும், இதில் பங்கேற்க வருபவர்கள், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஹரித்துவாரில் உள்ள கங்கை நதிக்கரையில், காலை 7 மணி வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.