திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனத்திற்கான டோக்கன் விநியோகம் ரத்து : தேவஸ்தானம் அறிவிப்பு
Apr 12 2021 7:20AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனத்திற்கான டோக்கன் விநியோகம் ரத்து செய்யப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கட்டண தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன. இது தவிர தேவஸ்தான கவுன்டர்களில் இலவச தரிசன டோக்கன்களும் வழங்கப்பட்டு வருகின்றன. திருப்பதியில் வழங்கப்பட்டு வரும் இலவச தரிசன டோக்கன்கள் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன டோக்கன்கள் இன்று மாலை 6 மணி வரை மட்டுமே வழங்கப்படும் எனவும், அதற்கு மேல் இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பக்தர்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.