திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் ஆலயத்தில் தெப்போற்சவம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்

Mar 9 2021 12:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி மாவட்டத்தில் உள்ள, உறையூர் கமலவல்லி நாச்சியார் ஆலயத்தில், தெப்போற்சவம் விமரிசையாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

108 திவ்யதேசங்களில் இரண்டாவதாக விளங்குவதும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும், திருமணத்தடை நீங்க திருவருள்புரியும் உறையூர் கமலவல்லி தாயார் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு, கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தெப்பத் திருவிழா தொடங்கியது. ஆறாம் நாளான நேற்று மாலை, கமலவல்லி தாயாரின் தெப்போற்சவம் விமரிசையாக நடைபெற்றது. சாய்ந்த கொண்டையணிந்து, கிளிமாலை, மார்பில் பதக்கம் மற்றும் திருவாபரணங்கள் சூட்டியவாறு, வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி, வீதியுலா வந்த கமலவல்லி தாயார், அதன்பின், ஆலய தீர்த்தக்குளத்தில் வண்ணமிகு மின் விளக்குகளாலும், பூக்களைக் கொண்டும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00