சபரிமலை ஐயப்பன் கோயிலின் பங்குனி மாத பூஜை - வரும் 14-ந் தேதி நடை திறப்பு
Mar 9 2021 11:06AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை வரும் 14-ந் தேதி திறக்கப்படுகிறது.
மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த பிப்ரவரி மாதம் 12-ந் தேதி திறக்கப்பட்டது. 5 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பிறகு அய்யப்பன் கோவில் நடை கடந்த மாதம் 17-ந் தேதி அடைக்கப்பட்டது.
இந்நிலையில் பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 14-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 5 நாட்கள் சிறப்பு பூஜை நடைபெறும். மாதாந்திர பூஜையின் தொடர்ச்சியாக வரும் 19-ந் தேதி பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா தொடங்குகிறது.
மாதாந்திர பூஜை மற்றும் விழா நாட்களில் தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும், கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் வரும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.