மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பங்குனித் திருவிழா - ஆலோசனைக்கூட்டம்
Mar 7 2021 6:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பங்குனித் திருவிழாவையொட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில், வரும் 18ம் தேதி பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, 31ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 28-ம் தேதி பங்குனி உத்திரம், 30-ம் தேதி பட்டாபிஷேகம், 31-ம் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெறவுள்ளன. விழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக்கூட்டம், திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் சௌந்தர்யா தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.